- Back to Home »
- அம்ருதானந்தமயி »
- அம்ருதானந்தமயி
Posted by : Unknown
October 03, 2014
![]() |
அம்ருதானந்தமயி |
கேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர்.
உலகம் முழுவதும் கல்வி, மருத்துவம் மற்றும் ஆன்மீகம் போன்ற துறைகளில்
சமூகசேவை புரிந்து வருபவர். ஓர் ஆன்மீகவாதியாகவும், சமூக சேவையாளராகவும் வாழ்ந்து
வருகிறவர். அம்ருதானந்தமயி தேவி அவர்களின் வாழ்க்கை வரலாறு வருகிறது. படியுங்கள். படித்து விட்டு அவரைப் பற்றி சற்று நேரம் அசை போட்டுப் பாருங்கள்.
பிறப்பு: செப்டம்பர் 27, 1953
இடம்: அமிர்தபுரி (கொல்லம் மாவட்டம்), கேரளா
பணி: சமூக சேவையாளர், ஆன்மீகவாதி
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
சமூக சேவையாளரான அம்ருதானந்தமயி,
1953 செப்டம்பர் மாதம் 27-ஆம் நாள் இந்தியா, கேரளா மாநிலத்தின்
கொல்லம் மாவட்டத்தில் உள்ள அமிர்தபுரி பறையகடவு சிறிய கிராமத்தில் பிறந்தவர். தகப்பனாரின் பெயர் சுகுனாதனந்தனம். தாயாரின் பெயர் தமயந்தியம்மையார். குடும்பத்தில் மூன்றாவது
மகள். ஒரு மீனவக் குடும்பம்.
ஆரம்ப வாழ்க்கை
தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாகவும்,
தன்னுடைய சகோதரிகளை கவனித்துக் கொள்ளவும், பள்ளிப் படிப்பை பாதியிலேயே
நிறுத்திக் கொண்டார். தன்னுடைய இளம் வயதிலேயே ஒரு
கடவுள் பக்தி கொண்டாவராக, ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராக
வளர்ந்தார். கிருஷ்ணா மீது அதிக பக்தி கொண்டவர்.
அம்ருதானந்தமயின் பயணம்
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக
வளர்ந்த அம்ருதானந்தமயி அவர்கள், தன்னுடைய இளம் வயதிலேயே ஆண் மற்றும் பெண்
என யாராக இருந்தாலும் ஒரு தாயைப்போலக் கட்டியணைத்து ஆறுதல் கூறுவார்.
அவருடைய பெற்றோர்கள் அவருக்குத் திருமணம் செய்ய பலமுயற்சிகள்
எடுத்தபோதிலும், ஆன்மீகத்தில் முழுமையாக தன்னை அர்பணித்துக்கொண்ட அவர்,
1979 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திற்கு அருகில் கொல்லம் என்ற இடத்தில் “மாதா
அம்ருதானந்தமயி மடம்” என்ற ஒன்றை நிறுவி தன்னுடைய சேவையை தொடர்ந்தார்.
அம்ருதானந்தமயி அவர்கள், ‘பக்தர்களை கட்டி அரவணைத்து ஒரு தாயை போல ஆறுதல்
கூரி தரிசனம் தருவதால்’ அனைவரளாலும் “அரவணைக்கும் அன்னை” என
அழைக்கப்படுகிறார். அவ்வாறு அரவணைக்கும் பொழுது ஆன்மீக ஆற்றலின் ஒரு துளியை
பக்தர்கள் பெறுவதாக கூறுகின்றனர்.
இதனால் மக்கள் அவரிடம் வந்து அவர்களுடைய
குறைகளையும், பிரச்சனைகளையும் கூறி மனநிம்மதி அடைகின்றனர். அம்ருதானந்தமயி
அவர்கள், சுமார் 1000க்கும் மேற்பட்ட பஜனைகளையும், (பக்தி பாடல்கள்)
முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடக்கூடியவர்.
1981 ஆம் ஆண்டின்
பிற்பகுதியில், இவர் உலகமுழுவதும் பல இடங்களில் ஆன்மீக உரையாற்றியுள்ளார்.
1993ல் உலக சமய நாடாளுமற்றத்தில், இந்து மத நம்பிக்கைத் தலைவராக சொற்பொழிவு
ஆற்றியுள்ளார்.
அம்ருதானந்தமயி அறக்கட்டளைகள்
அம்ருதானந்தமயி அவர்கள், அறக்கட்டளை மூலம்
பரவலாக உலகம் முழுவதும் கல்வி, மருத்துவம் ஆன்மிகம் போன்ற துறைகளில் ஏழை,
எளிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை புரிந்து வருகிறார்.
கல்வி நிறுவனங்கள்
அமிர்தா விஸ்வா வித்யாபீடம், அமிர்தா கணினி
தொழில்நுட்ப நிறுவனம், எம்.எ.எம் தொழிற்துறை பயிற்சிமையம், அமிர்தா
சமஸ்கிருத மேல்நிலைப்பள்ளி, அமிர்தா வித்யாலயம், அமிர்தா வித்யபீடம்
மற்றும் வேதாந்த வித்யாபீடம்.
மருத்துவம்
அமிர்தா மருத்துவ அறிவியல் மற்றும்
ஆராய்ச்சி நிறுவனம், அம்ரிதக்ரிப அறக்கட்டளை மருத்துவமனை, அம்ரிதாபுரி,
அம்ருதா ஆயுர்வேத மருத்துவ கழகம், அம்ருதா ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும்
உற்பத்தி மையம், கொல்லம். அமிர்தா கண் மருத்துவமனைகள்.
அம்ரிதா அன்பு
இல்லம்
அமிர்தா குட்டீரம் – ஏழை மற்றும்
ஊனமுற்றவர்களுக்கான வீட்டு வசதி திட்டம். அமிர்தா நிதி – விதவைகள் மற்றும்
ஆதரவற்றவர்களுக்கான ஓய்வூதிய திட்டம். அமிர்தா நிகேதனம் – அனாதை இல்லை.
அம்ரிதா கிருபா சாகர் – புற்றுநோயளிக்கான நலவாழ்வு திட்டம். அம்ரிதா அன்பு
இல்லம் – ஆதரவற்ற முதியோருக்கான இல்லம். திருவந்தபுரம் அம்ரிதா பெண்கள்
புனர்வாழ்வு மையம், திருச்சி அம்ரிதா பேச்சு மற்றும் கேட்கும் மேம்பாட்டுப்
பள்ளி, அம்ரிதா இலவச உணவு திட்டம்.
விருதுகளும், அங்கீகாரங்களும்
- 1993 – இந்து மத மறுமலர்ச்சி விருது
- 1998 – ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு மற்றும் ஷேர் சர்வதேச மனிதாபிமான விருது சிகாகோவிலிருந்து வழங்கப்பட்டது.
- 2002 – கர்மா யோகி விருது வழங்கப்பட்டது.
- 2005 – மகாவீர் மகாத்மா விருது வழங்கப்பட்டது.
- 2005 – சென்ட்டேன்னரி லெஜெண்டரி அவார்ட்ஸ் ஆஃப் த இன்டர்நேஷனல் ரோடரியன்ஸ்
- 2006 – ஜேம்ஸ் பார்க்ஸ் மோர்டன் இடைச்சமயம் விருது.
- 2010 – நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகம், இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.
அம்ருதானந்தமயி மடம் கிட்டதட்ட 12
கோயில்கள், 33 க்கும் மேற்பட்ட கல்விநிருவனங்கள் என தொடங்கி வீடற்ற
மக்களுக்கு வீடுகள் கட்டுதல், சுனாமி மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை
பாதிப்புகளால் அவதிப்படும் மக்களுக்கு நிதி உதவிகளையும் வழங்கி வருகிறது.