- Back to Home »
- அறிஞர் அண்ணா »
- அறிஞர் அண்ணா
Posted by : Unknown
October 01, 2014
அனைவராலும் அறிஞர் அண்ணா என பிரபலமாக அழைக்கப் பட்ட காஞ்சிபுரம் நடராஜன் (கா. ந.) அண்ணாதுரை, ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். அரசியலில் இறங்குவதுற்கு முன்பு ஒரு பள்ளி ஆசிரியராகவும், ஒரு பத்திரிக்கையாளராகவும் பணியாற்றினார். திராவிடக் கட்சி, திராவிடக் கழகம் மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடர்ந்த அண்ணாதுரை, தன்னுடைய ஆதரவாளர்களுடன் திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற கட்சியை உருவாக்கினார்.
அரசியல் உலகில் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்கியவர் அண்ணா. அவரின் மறைவிற்கு பின், இவரது பெயரால் “அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” (அ.தி.மு.க.) என்ற ஒரு கட்சி, எம். ஜி. ராமச்சந்திரனால் 1972-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.
தமிழக முதல்வராக தன் பணியைச் சிறப்பாக செய்த அண்ணாவின் புகழ் சாதாரண மக்களிடையே பெரும் புகழை தேடித் தந்தது. இவர் நவீன இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த, வலிமையான அரசியல் தலைவர்களுள் ஒருவராக இன்றுவரை கருதப் படுகிறார்.
அது மட்டும் அல்லாமல், இவர் அனைவராலும் பாராட்டுப் பெற்ற ஒரு சிறந்த பேச்சாளர். தமிழ், ஆங்கில இலக்கிய எழுத்தாளராகவும், ஒரு மேடை நாடகராகவும் புகழ் பெற்றவர். இவர் ஆங்கில மொழியில் சிறந்த புலமை பெற்றவர் என்பது பலருக்குத் தெரியாத விஷயம்.
பிறப்பு : செப்டம்பர் 15, 1909
இடம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு
இறப்பு : பிப்ரவரி 3, 1969
தொழில் : அரசியல்வாதி, எழுத்தாளர்
நாட்டுரிமை : இந்தியா
ஆரம்ப வாழ்க்கை
1909 செப்டம்பர் 15-இல் நடராஜன் - பங்காரு
அம்மாள் தமபதியருக்கு மகனாக காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
இவர் செங்குந்த முதலியார் வகுப்பைச் சார்ந்த ஒரு நடுத்தர நெசவாளர்
குடும்பத்தை சேர்ந்தவர்.
இவர் தனது பள்ளிப் படிப்பை சென்னை பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் தொடங்கினார். ஆனால், குடும்ப பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக படிப்பைப் பாதியில் நிறுத்த வேண்டிய நிலைமை. காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஒரு சாதாரண அலுவலராக வேலைக்குச் சேர்ந்தார்.
பிறகு பட்டப் படிப்பை பச்சையப்பா கல்லூரியில் தொடர்ந்தார். 1930-இல் 21 வயதில் ராணியை மணம்
முடித்தார். 1934-இல் பி .ஏ (ஹானர்ஸ்) பட்டமும், பிறகு முதுகலை எம். ஏ
(பொருளாதார அரசியல்) பட்டமும் பெற்றார்.
கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு ஆங்கில மொழி ஆசிரியராகப் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் பணியைத் தொடர்ந்தார். ஆனால், குறுகிய காலத்திலேயே ஆசிரியர் தொழிலை விட்டு விட்டு ஒரு முழு அரசியல்வாதியாக வாழ்க்கை பயணத்தைத் தொடங்கினார்.
அண்ணாவின் அரசியல்
கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அரசியலில்
ஈடுபட மிகவும் ஆர்வம் கொண்டார் அண்ணா. 1934-ஆம் ஆண்டு கோயமுத்தூர் மாவட்டம்
திருப்பூரில் நடந்த ஒரு இளைஞர் மாநாட்டில் பெரியாருடன் முதல் சந்திப்பு
ஏற்பட்டது. அவருடைய கொள்கைகள் அண்ணாவைப் பெரிதும் ஈர்த்தது.
அதனால் பெரியாரின் நீதி கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார். பிறகு பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீதி கட்சியில் இருந்து பிரிந்து “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை 1949-இல் உருவாக்கினார்.
நீதி கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த இவர், பிறகு விடுதலை, குடியரசு பத்திரிக்கைகளுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார். அது மட்டும் அல்லாமல் “திராவிட நாடு” என்ற தலைப்பில் ஒரு தமிழ் இதழையும் தொடங்கினார்.
அதனால் பெரியாரின் நீதி கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார். பிறகு பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீதி கட்சியில் இருந்து பிரிந்து “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற தனது சொந்த கட்சியை 1949-இல் உருவாக்கினார்.
நீதி கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த இவர், பிறகு விடுதலை, குடியரசு பத்திரிக்கைகளுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார். அது மட்டும் அல்லாமல் “திராவிட நாடு” என்ற தலைப்பில் ஒரு தமிழ் இதழையும் தொடங்கினார்.
திமுக உருவாக்கம்
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது காலனி
ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரஸ் வன்மையாகக் கண்டித்தது. ஆனால்,
இந்தக் கட்சி பெரும்பாலும் பிராமணர்கள், வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த
கட்சியாக இருக்கிறது என்று பெரியாராலும் விமர்சிக்கப் பட்டது.
இதனால் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, 1947-ஐ கறுப்பு தினமாக அறிவிக்க தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார் பெரியார். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அண்ணா, இந்தியாவின் சுதந்திரம் இந்தியாவில் உள்ள அனைவரின் போராட்டத்தினாலும், வியர்வையாலும் கிடைக்கப் பெற்ற ஒன்று. அது ஆரிய வடஇந்தியர்களால் மட்டும் பெறப் பட்டது அல்ல என்றார்.
இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1948-இல் நடந்த திராவிட கட்சியின் கட்சிக் கூட்டத்தில் இருந்து அண்ணா வெளியேறவும் நேர்ந்தது. அது மட்டும் அல்லாமல், பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மணந்ததால் அண்ணாவும் அவருடைய ஆதரவாளர்களும் திராவிட கட்சியை விட்டு வெளியேறினர்.
1949-இல் “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற கட்சியை, பெரியாரின் மருமகன் இ.வி.கே. சம்பத்துடன் இணைந்து உருவாக்கினார். இக்கட்சி குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றது.
இதனால் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, 1947-ஐ கறுப்பு தினமாக அறிவிக்க தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார் பெரியார். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அண்ணா, இந்தியாவின் சுதந்திரம் இந்தியாவில் உள்ள அனைவரின் போராட்டத்தினாலும், வியர்வையாலும் கிடைக்கப் பெற்ற ஒன்று. அது ஆரிய வடஇந்தியர்களால் மட்டும் பெறப் பட்டது அல்ல என்றார்.
இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1948-இல் நடந்த திராவிட கட்சியின் கட்சிக் கூட்டத்தில் இருந்து அண்ணா வெளியேறவும் நேர்ந்தது. அது மட்டும் அல்லாமல், பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மணந்ததால் அண்ணாவும் அவருடைய ஆதரவாளர்களும் திராவிட கட்சியை விட்டு வெளியேறினர்.
1949-இல் “திராவிட முன்னேற்ற கழகம்” (தி.மு.க) என்ற கட்சியை, பெரியாரின் மருமகன் இ.வி.கே. சம்பத்துடன் இணைந்து உருவாக்கினார். இக்கட்சி குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றது.
திராவிட நாடு
பெரியாரின் திராவிட கழகத்தில் அண்ணா இருந்த போது,
பெரியாரின் திராவிட நாடு கொள்கைக்கு ஆதரவு அளித்து வந்தார். ஆனால்,
பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட அவரின் மருமகன் இ.வி.கே சம்பத்
அந்தக் கொள்கைக்கு மறுப்பு தெரிவித்து வந்தார். அதையும் தவிர்த்து பெரியாரின் திராவிட
கழகத்தை விட்டு விலகி தி.மு.க.விலும் இணைந்தார்.
ஆனால், அண்ணாவின் தி.மு.க. கட்சி தமிழ் திரைப்படக் கலைஞர்களை முன்னிறுத்தி செயல் பட்டதை விரும்பாத இ.வி.கே. சம்பத், தி.மு.க. வில் இருந்து விலகி 1961-இல் “தமிழ் தேசியவாதக் கட்சி” என்ற ஒரு தனி கட்சியைத் தொடங்கினார்.
1962-இல் நடந்த மாநிலங்கள் அவையில் அண்ணா பேசுகையில், ‘நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற நாடு’ என்று சொன்னார். அதன் பிறகு இந்தியா மொழிவாரி மாநிலமாக பிரிக்கப் பட்டது. தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் (தமிழ் நாடு) மாநிலமாக உருவாக்கப் பட்டது. “திராவிட நாடு, திராவிடருக்கே!’ என்ற உண்மையை உணர்ந்த அவர் அந்தக் கொள்கையைக் கைவிட்டார்.
ஆனால், அண்ணாவின் தி.மு.க. கட்சி தமிழ் திரைப்படக் கலைஞர்களை முன்னிறுத்தி செயல் பட்டதை விரும்பாத இ.வி.கே. சம்பத், தி.மு.க. வில் இருந்து விலகி 1961-இல் “தமிழ் தேசியவாதக் கட்சி” என்ற ஒரு தனி கட்சியைத் தொடங்கினார்.
1962-இல் நடந்த மாநிலங்கள் அவையில் அண்ணா பேசுகையில், ‘நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற நாடு’ என்று சொன்னார். அதன் பிறகு இந்தியா மொழிவாரி மாநிலமாக பிரிக்கப் பட்டது. தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் (தமிழ் நாடு) மாநிலமாக உருவாக்கப் பட்டது. “திராவிட நாடு, திராவிடருக்கே!’ என்ற உண்மையை உணர்ந்த அவர் அந்தக் கொள்கையைக் கைவிட்டார்.
இந்தி எதிர்ப்பு
1928-இல் மோதிலால் நேரு, இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாகப் பயன்படுத்த இந்தியைப் பரிந்துரைத்தார். அதற்கு தமிழக
மக்களும் தமிழக அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தி மொழி வட இந்தியர்களின் முக்கிய மொழியாக இருப்பதால் மற்ற மொழிகளைப் பேசும் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுவார்கள் வேண்டும் என்று கருதினார்கள். கடுமையாகவும் எதிர்த்தார்கள்.
1938-இல் மதராஸ் மாநிலத்தில் இருந்த அனைத்து பள்ளிகளிலும் கட்டாய மொழியாக இந்தி பயன்படுத்த பரிந்துரை செய்யப் பட்டது. அதை விரும்பாத அண்ணா, பாரதிதாசன், புலவர்கள், அரசியல் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இது மிகப் பெரிய போராட்டமாக வெடித்தது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப் பட்டனர். இந்தப் போராட்டத்தில் நடராஜன் என்பவர் தமிழுக்காக உயிரையும் தியாகம் செய்தார். அவரின் இறப்பு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் ஒரு முக்கிய தூண்டுகோலாகவும் இருந்தது.
இதன் விளைவாக பிப்ரவரி 1938-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணாதுரை, பாரதிதாசன் உட்பட பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிபடுத்தினர்.
இந்தி மொழி வட இந்தியர்களின் முக்கிய மொழியாக இருப்பதால் மற்ற மொழிகளைப் பேசும் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக கருதப்படுவார்கள் வேண்டும் என்று கருதினார்கள். கடுமையாகவும் எதிர்த்தார்கள்.
1938-இல் மதராஸ் மாநிலத்தில் இருந்த அனைத்து பள்ளிகளிலும் கட்டாய மொழியாக இந்தி பயன்படுத்த பரிந்துரை செய்யப் பட்டது. அதை விரும்பாத அண்ணா, பாரதிதாசன், புலவர்கள், அரசியல் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களும் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இது மிகப் பெரிய போராட்டமாக வெடித்தது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப் பட்டனர். இந்தப் போராட்டத்தில் நடராஜன் என்பவர் தமிழுக்காக உயிரையும் தியாகம் செய்தார். அவரின் இறப்பு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் ஒரு முக்கிய தூண்டுகோலாகவும் இருந்தது.
இதன் விளைவாக பிப்ரவரி 1938-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணாதுரை, பாரதிதாசன் உட்பட பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்பை வெளிபடுத்தினர்.
1950-இல், இந்தியா ஒரு குடியரசு
நாடாக மாறியது. அப்போது இந்தி மொழி இந்தியாவின் அலுவலக ஆட்சி மொழியாக 15
ஆண்டிற்குப் பின், அதாவது 1965-இல் நடைமுறை படுத்தப்படும் என அறிவிக்கப் பட்டது. இந்த
அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இதனால் 1960-இல் கட்டாய இந்தி மொழி திணிப்பை எதிர்த்து, தி.மு.க. கட்சி கோடம்பாக்கத்தில் “இந்தி எதிர்ப்பு மாநாடு” நடத்தியது. பிறகு இந்திய குடியரசு தலைவர் வருகையின் பொழுது கருப்புக்கொடி காட்டி தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதனைக் கண்ட இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி மொழியைப் பேச விரும்பாத மக்கள் இருக்கும் வரையில், ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று இந்திய அரசியல் அமைப்பில் சட்ட திருத்தம் செய்தார். அதன் பிறகு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப் பட்டது. இந்தப் போராட்டம் தான் 1967-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா வெற்றி பெற ஓர் முக்கிய காரணமாகவும் அமைந்தது.
இதனால் 1960-இல் கட்டாய இந்தி மொழி திணிப்பை எதிர்த்து, தி.மு.க. கட்சி கோடம்பாக்கத்தில் “இந்தி எதிர்ப்பு மாநாடு” நடத்தியது. பிறகு இந்திய குடியரசு தலைவர் வருகையின் பொழுது கருப்புக்கொடி காட்டி தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதனைக் கண்ட இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி மொழியைப் பேச விரும்பாத மக்கள் இருக்கும் வரையில், ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று இந்திய அரசியல் அமைப்பில் சட்ட திருத்தம் செய்தார். அதன் பிறகு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப் பட்டது. இந்தப் போராட்டம் தான் 1967-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா வெற்றி பெற ஓர் முக்கிய காரணமாகவும் அமைந்தது.
தமிழக முதல்வராக அண்ணா
1967-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், காங்கிரஸ்
கட்சியை எதிர்த்த தி.மு.க. ஒன்பது மாவட்டங்களில் வெற்றி பெற்றது. ஆனால்
காங்கிரஸ் கட்சி சென்னையில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம்
1967 பிப்ரவரி மாதம், சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார் அண்ணா.
ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்கினார். தனது திராவிடப் பற்றை உறுதி படுத்தினார். மேலும் மதராஸ் மாநிலம் என்று இருந்த சென்னை மாகாணத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றினார். அதனால் தமிழக வரலாற்றில் நீங்காத இடம் பெற்றார்.
அது மட்டும் இல்லை. ஏற்கனவே, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், கேரளா போன்ற அண்டை மாநிலங்கள் மூன்று மொழி திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. அந்தத் திட்டத்திற்கு எதிராக தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை அண்ணா அமல் படுத்தினார்.
1968 ஜனவரி 3-இல் “இரண்டாம் உலக தமிழ் மாநாடு” நடத்தப் பட்டது. அதற்கு முக்கியப் பொறுப்பு வகித்தார். பின்னர் 1968 ஏப்ரல் மாதம் யேல் என்கிற அமெரிக்கப் பல்கலைக்கழகம் இவருக்கு “சுபப் பெல்லோஷிப்” என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.
இந்த விருதைப் பெற்ற அமெரிக்க அல்லாத முதல் இந்தியர் என்ற பெருமையும் இவரைத் தேடித் வந்தது. பின்னர் அதே ஆண்டில், அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கெளரவ முனைவர் பட்டமும் வழங்கப் பட்டது.
ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்கினார். தனது திராவிடப் பற்றை உறுதி படுத்தினார். மேலும் மதராஸ் மாநிலம் என்று இருந்த சென்னை மாகாணத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றினார். அதனால் தமிழக வரலாற்றில் நீங்காத இடம் பெற்றார்.
அது மட்டும் இல்லை. ஏற்கனவே, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், கேரளா போன்ற அண்டை மாநிலங்கள் மூன்று மொழி திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. அந்தத் திட்டத்திற்கு எதிராக தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையை அண்ணா அமல் படுத்தினார்.
1968 ஜனவரி 3-இல் “இரண்டாம் உலக தமிழ் மாநாடு” நடத்தப் பட்டது. அதற்கு முக்கியப் பொறுப்பு வகித்தார். பின்னர் 1968 ஏப்ரல் மாதம் யேல் என்கிற அமெரிக்கப் பல்கலைக்கழகம் இவருக்கு “சுபப் பெல்லோஷிப்” என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.
இந்த விருதைப் பெற்ற அமெரிக்க அல்லாத முதல் இந்தியர் என்ற பெருமையும் இவரைத் தேடித் வந்தது. பின்னர் அதே ஆண்டில், அவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கெளரவ முனைவர் பட்டமும் வழங்கப் பட்டது.
அண்ணாவின் இலக்கிய பங்களிப்பு
அண்ணா அரசியல் வாழ்க்கையை தவிர,
நாடகங்களுக்கும், திரைபடங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவராக
விளங்கினார். அது மட்டும் அல்லாமல் அண்ணாதுரை ஒரு மிகச் சிறந்த தமிழ்
சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்.
அவர், அவருக்கே உரித்தான தனிப்பட்ட பாணியில் அனைவரையும் கவர்கின்ற வகையில் பேசும் திறனையும் எழுத்தாற்றலையும் பெற்றவராக விளங்கினார். அவர் பல நாவல்கள், சிறுகதைகள், அரசியல் சார்ந்த மேடை நாடகங்களையும் எழுதினார். அவர் தனது சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார்.
மேலும் 1948-இல் எழுதப்பட்ட இலட்சிய வரலாறு, வாழ்க்கைப் புயல், ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ., கலிங்கா ராணி, பாவையின் பயணம் போன்றவை இவரின் முக்கிய படைப்புகளாகும்.
அவர், அவருக்கே உரித்தான தனிப்பட்ட பாணியில் அனைவரையும் கவர்கின்ற வகையில் பேசும் திறனையும் எழுத்தாற்றலையும் பெற்றவராக விளங்கினார். அவர் பல நாவல்கள், சிறுகதைகள், அரசியல் சார்ந்த மேடை நாடகங்களையும் எழுதினார். அவர் தனது சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார்.
மேலும் 1948-இல் எழுதப்பட்ட இலட்சிய வரலாறு, வாழ்க்கைப் புயல், ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ., கலிங்கா ராணி, பாவையின் பயணம் போன்றவை இவரின் முக்கிய படைப்புகளாகும்.
அண்ணாவின் திரைப்பட வாழ்க்கை
1948 ஆம் ஆண்டு ‘நல்லதம்பி’ என்ற
திரைப்படத்தை முதன் முதலில் அரங்கேற்றினார். இந்தப் படம் ஜமீன்தார்
ஒழிப்பு முறையை வலியுறுத்தி எடுக்கப் பட்டத் திரைப் படமாகும். இந்தப் படத்தில்
என்.எஸ். கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்தப் படம்
இவருக்கு 12,000 ரூபாயைப் பெற்றுத் தந்தது. அது அந்த நேரத்தில் ஒரு பெரிய
தொகையாகும்.
இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி (1949) மற்றும் ஒர் இரவு போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப் பட்டன. அந்த வகையில் இ. நாராயணசுவாமி, K.R. ராமசாமி, N.S. கிருஷ்ணன், எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் போன்ற திரை நட்சத்திரங்களின் ஆதரவும் இவருக்கு கிடைக்கப் பெற்றது.
இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி (1949) மற்றும் ஒர் இரவு போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப் பட்டன. அந்த வகையில் இ. நாராயணசுவாமி, K.R. ராமசாமி, N.S. கிருஷ்ணன், எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் போன்ற திரை நட்சத்திரங்களின் ஆதரவும் இவருக்கு கிடைக்கப் பெற்றது.
இறப்பு
இரண்டு ஆண்டு காலம் தமிழக முதல்வராகப்
பணியாற்றிய அண்ணாதுரை 1969-ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி நோய்வாய்ப்பட்டு இறந்தார். அவர்
புற்று நோயால் அவதிபட்டுக் கொண்டிருந்த போதிலும், அவர் தன்னுடைய உடலை
ஆரோக்கியமாக வைத்து இருந்தார்.
அவருக்குப் புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது. அதுவே அவருக்கு எமனாக மாறியது. அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு “கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்” இடம் பெற்றுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 மில்லியன் மக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
இவருடைய உடல் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப் பட்டது. அதன் பிறகு இவரின் நினைவைப் போற்றும் வகையில் அந்த இடம் அண்ணா சதுக்கம் என்று பெயரிடப் பட்டது.
அவருக்குப் புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது. அதுவே அவருக்கு எமனாக மாறியது. அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு “கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்” இடம் பெற்றுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 மில்லியன் மக்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
இவருடைய உடல் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப் பட்டது. அதன் பிறகு இவரின் நினைவைப் போற்றும் வகையில் அந்த இடம் அண்ணா சதுக்கம் என்று பெயரிடப் பட்டது.
நினைவுகள்
அண்ணா மறைந்த பிறகு, தி.மு.க. வில் கட்சி பிளவு ஏற்பட்டது. நடிகர்
எம்.ஜி. ராமச்சந்திரனால் 1972-ஆம் ஆண்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட
முன்னேற்ற கழகம் (அ.இ.அ.தி.மு.க) என்ற புதிய கட்சி அண்ணாவின் பெயரால்
உருவாக்கப்பட்டது.
அண்ணாவை நினைவு கூறும் வகையில் சென்னையில் உள்ள ஒரு குடியிருப்புக்கு “அண்ணா நகர்” என பெயரிடப் பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தற்போதைய தி.மு.க. தலைமைச் செயலக கட்டிடத்துக்கு அவரின் நினைவாக “அண்ணா அறிவாலயம்” என்றும் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு “அண்ணா சாலை” என அவரது பெயரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அண்ணா சிலை அங்கு வைக்கப் பட்டது,
அண்ணாதுரை என்ற உயர்ந்த மனிதருக்கு காணிக்கையாக 2010 ஆம் ஆண்டு “அண்ணா நூற்றாண்டு நூலகம்” எனும் ஒரு காப்பகம் சென்னையில் நிறுவப் பட்டது.
அண்ணாவை நினைவு கூறும் வகையில் சென்னையில் உள்ள ஒரு குடியிருப்புக்கு “அண்ணா நகர்” என பெயரிடப் பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தற்போதைய தி.மு.க. தலைமைச் செயலக கட்டிடத்துக்கு அவரின் நினைவாக “அண்ணா அறிவாலயம்” என்றும் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு “அண்ணா சாலை” என அவரது பெயரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அண்ணா சிலை அங்கு வைக்கப் பட்டது,
அண்ணாதுரை என்ற உயர்ந்த மனிதருக்கு காணிக்கையாக 2010 ஆம் ஆண்டு “அண்ணா நூற்றாண்டு நூலகம்” எனும் ஒரு காப்பகம் சென்னையில் நிறுவப் பட்டது.
அண்ணாவின் படைப்புகள்
- 1939 – கோமளத்தின் கோபம்
- 1942 – களிங்கரணி
- 1943 – பார்வதி B.A
- 1943 – சந்ரோதயம்
- 1945 – சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
- 1946 – வேலைக்காரி
- 1946 – குமரிகோட்டம்
- 1948 – நல்ல தம்பி
- 1948 – ஓர் இரவு
- 1953 – சொர்க வாசல்
- 1955 – சூர்யாகுமாரி
- 1965 – தழும்புகள்
- 1970 – இன்ப ஒளி
திரைப்படங்கள்
- 1948 – நல்லதம்பி
- 1946 – வேலைக்காரி
- 1948 – ஓர் இரவு
- 1956 – ரங்கூன் ராதா
- 1963 – பணத்தோட்டம்
- 1967 – வாலிப விருந்து
- 1946 – குமரி கோட்டம்
- 1973 – ராஜபாட் ரங்கதுரை
- 1982 – நீதிதேவன் மயக்கம்
காலவரிசை
- 1909 – தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் பிறந்தார்
- 1930 – ராணி என்ற பெண்ணை மணமுடித்தார்.
- 1934 – பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை பட்டம்.
- 1935 – ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தார்.
- 1938 – காஞ்சிபுரத்தில் முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு.
- 1944 – நீதிக்கட்சி - திராவிடர் கழகம் என பெயர் மாற்றம்.
- 1948 – அண்ணாவின் முதல் படமான “நல்லதம்பி” திரையிடப் பட்டது.
- 1949 – திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) நிறுவப் பட்டது.
- 1962 – ராஜ்ய சபாவுக்கு தேர்வு.
- 1967 – சென்னை மாகாண முதலமைச்சராக தேர்வு.
- 1968 – யேல் பல்கலைக்கழகத்தில் பெல்லோஷிப் பட்டம்.
- 1969 – சென்னை அரசு தமிழ்நாடு என பெயர் மாற்றம்.
- 1969 – பிப்ரவரி 3-ஆம் தேதி தன்னுடைய 59 வது வயதில் மரணம்.
- 1972 – அண்ணா திராவிடமுன்னேற்ற கழகம் (அ.தி.மு.க உருவாக்கம்)
- 1978 – அண்ணா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப் பட்டது.
- 1987 – அண்ணா அறிவாலயம் கட்டப் பட்டது.
- 2010 – அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் நிறுவப் பட்டது.
