- Back to Home »
- மலாக்கா அலோர் காஜாவில் »
- மலாக்கா அலோர் காஜாவில்
Posted by : Unknown
August 07, 2017
ஆகஸ்டு 06, 2017
உலகமயச் சவால்களை எதிர்கொள்ள நமது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உலகமயச் சவால்களை எதிர்கொள்ள நமது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
புதிய சிந்தனையுடன் கூடிய நாடாக மலேசியாவை உருமாற்றுவோம். நடப்பு உலகமயச் சவால்களை எதிர்கொள்ள இளம் தலைமுறை சுய ஆற்றலை மேம்படுத்திக் கொள்வது அவசியம். போட்டியாற்றல் மிக்க வேலைச் சந்தையில் சிறந்த வாய்ப்புக்களைக் கைப்பற்ற இளையோர் அனைத்து துறைகளிலும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
உலகமயமாதலால் பெரும்பாலான நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் பின் தள்ளிவிடப்படாமல் இருக்கவும் மேலை நாடுகளுக்கு இன்னும் அடிமையாக இருப்பதைத் தவிர்க்கவும் பல திட்டங்களைச் செவ்வனவே வடிவமைத்து வருகின்றன. வளர்ச்சி கண்டு வரும் நாடான மலேசியாவில் மலாய்க்காரர், சீனர், இந்தியர் மற்றும் சபா சரவாக்கின் பூர்வக்குடியினர் அல்லது பூமிபுத்திரா வாழ்ந்து வருகின்றனர்.
மலேசியாவில் பல மதங்களையும் கலாச்சாரங்களையும் பின்பற்றி வாழும் பல இன மக்கள் தங்கள் மனதில் "நாங்கள் மலேசியர்கள்" என்ற எண்ணத்தோடு ஒன்றிணைந்தால் உலகமய தாக்கலினை எதிர்கொண்டு நாட்டு வளர்ச்சிக்கு வித்திட முடியும்.
மலேசியாவில் பல மதங்களையும் கலாச்சாரங்களையும் பின்பற்றி வாழும் பல இன மக்கள் தங்கள் மனதில் "நாங்கள் மலேசியர்கள்" என்ற எண்ணத்தோடு ஒன்றிணைந்தால் உலகமய தாக்கலினை எதிர்கொண்டு நாட்டு வளர்ச்சிக்கு வித்திட முடியும்.

